Asianet News TamilAsianet News Tamil

இடைக்கால பட்ஜெட்... எந்தெந்த துறைக்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கீடு.... முழு விவரம் உள்ளே..!

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Interim Budget...22,218 crore for the local government sector
Author
Chennai, First Published Feb 23, 2021, 12:23 PM IST

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள விவரம்:

*  உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*  நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*  பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு செலவு திட்டம் மதிப்பீட்டில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1

*  வேளாண்மைத் துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*  மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*  நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 1,580 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* காவல்துறைக்கு வரும் ஆண்டில் ரூ.9,567 கோடி ஒதுக்கிடு செய்யப்படும். 

*  தமிழக தொழில் முதலீட்டு கழகத்துக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நலனுக்காக ரூ.688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  உயர்கல்வித்துறையில் ரூ.5,478.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

*  காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு 

*  சமூக நலத்துறைக்கு 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு 

*  மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு, வசதிகளை உறுதி செய்ய 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சிறப்புத் திட்டம் 

*  ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு ரூ.144 கோடி ஒதுக்கீடு 

*  மின்கட்டண மானியங்களுக்கு ரூ.8,834 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

*  இளைஞர் நலன் மற்றமு் வளையாட்டு மேம்பாட்டுத்தறைக்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* புதிய நீதிமன்றங்களை கட்ட 289.78 கோடி ரூபாய் உட்பட நீதித்துறைக்கு 1,437.82 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகளின் பயிர்க்கடன் திட்டத்திற்கு 1738.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நகர்ப்புற வடிகால் திட்டம் 1,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* சத்துணவுத் திட்டத்திற்கான மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு

* சத்துணவுத் திட்டத்திற்கான மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு

* சென்னையை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ.3,410 கோடி ஒதுக்கீடு

Follow Us:
Download App:
  • android
  • ios