பிரேசிலை ஓவர்டேக் செய்த இந்தியா.. மின்வேகத்தில் எகிறும் பாதிப்பு, உயிரிழப்பு.. கையை பிசையும் மோடி அரசு..!
இந்தியாவில் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 1,35,27,717ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 1,35,27,717ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,56,529ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 12,01,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 10,45,28,565 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,80,136 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 78 லட்சத்து 06 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3வது இடத்தில் இருந்த இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 31,918,591 பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 13,482,543 பாதிப்புகளுடன் பிரேசில் 3வது இடத்தில் உள்ளது.