Income Tax Department reported that Jayalalithaa had searched 5 rooms in the house.

ஜெயலலிதா வீட்டில் 5 அறைகளில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதில் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். 

இதைதொடந்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் இல்லத்திலும் உதவியாளர் பூங்குன்றன் அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தப்படவில்லை என தெரிவித்தார். 

ஆனால் ஜெயலலிதா வீட்டில் 5 அறைகளில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா வீட்டில் ஒரு லேப்டாப், 2 டேப்லெட், ஏரளமான பென்டிரைவ் சிக்கின என்று தெரிவித்துள்ளது. 

இளவரசி மகள் ஷகிலா கணவர் ராஜராஜனிடம் ஜெயலலிதா வீட்டு சாவி பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.