வருமான வரித்துறை கிடுக்குப்பிடி... துபாயில் பிரண்ட்ஷிப்... சிக்கலில் சபரீசன்..!
சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. அப்போது எதுவுமே சிக்கவில்லை என, தி.மு.க.,வினர் மகிழ்ச்சியுடன் கூறி வந்தனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. அப்போது எதுவுமே சிக்கவில்லை என, தி.மு.க.,வினர் மகிழ்ச்சியுடன் கூறி வந்தனர்.
ஆனால், சோதனை முடிந்ததும், எட்டு பக்க ரகசிய அறிக்கையை வருமான வரித்துறையின் தலைவருக்கு அனுப்பியுள்ளார், தமிழக சீனியர் வருமான வரித் துறை அதிகாரி. அதில் பல முக்கியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையை படித்த மத்திய வருவாய்த் துறை செயலர், ஒரு ரகசிய குறிப்பை எழுதி பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், 'சபரீசன், துபாயில் யார், யாருடன் அடிக்கடி தொடர்பில் உள்ளார் என்பது குறித்து விசாரணை தேவை' என குறிப்பிடப்பட்டுள்ளதாம். 'தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பின், சபரீசனுக்கு பிரச்னைதான்' என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.