Asianet News TamilAsianet News Tamil

21 வயது பனியன் கம்பெனி ஓனருடன் 36 வயது பெண் ஓட்டம்.. வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதல் ஜோடி எடுத்த முடிவு..!

திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(45). இவரது மனைவி தங்கமணி(36).  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தங்கமணி அனுப்பர்பாளையம் தண்ணீர் பந்தல் வீரப்பன் செட்டியார் தோட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பழனிச்சாமி கடந்த 2 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.

illegal love couple commits suicide
Author
Tiruppur, First Published Sep 16, 2021, 6:29 PM IST

கோபி அருகே விவசாய கிணற்றில் குதித்து திருப்பூரை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சிசியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(45). இவரது மனைவி தங்கமணி(36).  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தங்கமணி அனுப்பர்பாளையம் தண்ணீர் பந்தல் வீரப்பன் செட்டியார் தோட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பழனிச்சாமி கடந்த 2 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவரது மகன் அஸ்வின்(21) நிறுவனத்தை நடத்தி வந்தார்.

illegal love couple commits suicide

இந்நிலையில், அவருக்கும் தங்கமணிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.  சில நாட்களிலேயே இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் இருவரது குடும்பத்தினற்கும் தெரியவந்தது. இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்களை பிரிந்து விடுவார்கள் என்று கள்ளக்காதல் ஜோடி அச்சம் அடைந்தனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியேறினர்.  

பேருந்து மூலம் கோபி வந்தனர். கருங்காடு வரை பேருந்தில் பயணம் செய்த கள்ளக்காதல் ஜோடி பின்னர் அங்கிருந்து நடந்து சென்றனர். இரவு நேரத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற அவர்கள்  மேவாணியில் செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அருகே வந்தனர். தங்கள் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்துவிட்டதால் மிகுந்த அவமானம் அடைந்த ஒன்றாக சாக முடிவு செய்தனர். அதன்படி  ஏற்கனவே அவர்கள் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்தனர். பின்னர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று தோட்ட உரிமையாளர் கிணற்றில் பார்த்தபோது பெண் பிணம் மிதந்தது. அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருரக்கும் தகவல் தெரிவித்தனர். 

illegal love couple commits suicide

சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் ஆழமான பகுதியில் இருந்து இருவரது உடலும் மீட்கப்பட்டது. கிணற்றில் கரையில் தங்கமணியின் கைப்பை இருந்தது. அதில், கிடைத்த முகவரியை வைத்து விசாரித்தபோது மேற்கண்ட விபரம் தெரியவந்தது. இருவரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios