if ttv dinakaran wins ready to leave india said writer saaru nivetha
முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவினை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலை சந்திக்க திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் சசிகலா சார்பில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓ.பி.எஸ். சாா்பில் அரசியல் முதிர்ச்சி பெற்ற மதுசூதனன் களம் காண்கிறார். திமுக தரப்பில் மருதுகணேஷ் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
ஒரு சிலர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான மக்கள் அவருக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்துள்ளனர். ஆனால் டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால், இந்த நாட்டை விட்டே வெளியேறி விடுவேன் என எழுத்தாளர் சாரு நிவேதா தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த விவகாரம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
