Asianet News TamilAsianet News Tamil

2 லட்சம் ஓட்டு மட்டும் கூடுதலா வாங்கியிருந்தா இந்நேரம் எடப்பாடியார்தான் முதல்வர்.. வருத்தத்தில் மாஜி அமைச்சர்!

2 லட்சம் வாக்குகள் மட்டும் கூடுதலாக வாங்கியிருந்தால் முதல்வர் எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 
 

If only 2 lakh votes had been bought, Edappadi is the Chief Minister.. former Minister sad!
Author
Madurai, First Published Jul 2, 2021, 9:21 PM IST

மதுரை திருமங்கலத்தில் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “மே 2ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என தீர்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தீர்ப்பு மாறிவிட்டது. மக்கள் அளித்த தீர்ப்பு மக்களின் எண்ண ஓட்டத்திற்கான தீர்ப்பாக இல்லை. இதுகுறித்து நாம் விவாதிக்கிறபோதுதான் கட்சிக்குள் உள்குத்து, வெளிக்குத்து இருந்ததாலேயே நாம் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது.If only 2 lakh votes had been bought, Edappadi is the Chief Minister.. former Minister sad!
நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டிருந்தால் அதிமுக என்ற இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாது. அதிமுகவை வெல்லும் சக்தியால் நாம் தோற்கடிக்கப்படவில்லை. அதிமுகவை வெல்லும் சக்தி எங்கேயுமே கிடையாது. எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் மக்கள் நமக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்கள். 1.50 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கத்தில் நாம் 1.46 கோடி வாக்குகள் வாங்கியிருக்கிறோம். அதிமுகவுக்கு பொங்கலுக்கு கரும்பு 2,500 ரூபாய் பணம், அரிசி, சர்க்கரை வாங்கிச் சென்ற குடும்பத்தில் ஒருவர் ஓட்டு போட்டிருந்தாலே நாம் ஆட்சியில் நிலைத்திருக்கலாம்.If only 2 lakh votes had been bought, Edappadi is the Chief Minister.. former Minister sad!
நமக்கு தோல்வி கிடைத்த இடங்களில் வாக்கு வித்தியாசம், மிகவும் குறைந்த அளவில்தான் இருந்தது. 2 லட்சம் வாக்குகள் மட்டும் கூடுதலாக வாங்கியிருந்தால் முதல்வர் எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்திருப்போம்” என்று உதயகுமார் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios