சசிகலாவை ரகசியமாக சந்திக்க காத்திருக்கும் ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் அதிகாரிகள்... அதிர வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்!
யாரெல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் சசிகலா உறவினர் திவாகரன், தாராளமாக, ஏராளமாக பரிசுகள், அன்பளிப்பு கொடுத்திருக்கிறாராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவிற்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது உடல் நலம் சீரடைந்து வருவதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் இன்னும் சில நாட்களில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
வெளியில் வரும் அவரை யார் யார் சந்திக்க இருக்கிறார்கள் என்கிற விவரங்களை பட்டியல் போட்டு வருகிறது உளவுத்துறை. சிறையில் இருந்து 27ம் தேதி வெளியில் வர சசிகலாவைச் சந்திக்க, நிறைய பேர் ஆவலாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என நிறையபேர் பட்டியலில் இருக்கிறார்கள்.
''இவர்கள் அனைவரும் ஜெயலலிதா இருக்கும்போது, சசிகலாவின் தயவில் பதவி, டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு தகவல் சொல்லி வந்தவர்கள். இப்போது மறுபடியும், பதவி மற்றும் 'விரும்பியவை' கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டு, சசிகலா பின்னால் அணி வகுக்கலாம் என யோசிக்கிறார்கள்.
ஆனால் அப்படி முயற்சிப்பவர்களின் பட்டியல் உளவுத் துறை மூலமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைக்கு போயிருப்பதாக தகவல். அடுத்து சிறையில் சசிகலாவுக்கு சாப்பாடு முதற்கொண்டு என்னென்னவையெல்லாம், யாரெல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் சசிகலா உறவினர் திவாகரன், தாராளமாக, ஏராளமாக பரிசுகள், அன்பளிப்பு கொடுத்திருக்கிறாராம். இதனால் சிறைத்துறை ஊழியர்கள் அகமகிழ்ந்து போய் கிடக்கிறார்கள்.