Asianet News TamilAsianet News Tamil

நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலையை யாராலும் அசைக்க முடியாது! அதிமுக என் கட்டுப்பாட்டுக்குள் வரும்! சசிகலா

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

I will bring AIADMK back under control... sasikala
Author
First Published Jan 24, 2023, 2:34 PM IST

2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும், அதிமுகவை மீண்டும் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என சசிகலா கூறியுள்ளார். 

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

I will bring AIADMK back under control... sasikala

இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா;-  இரட்டை இலை சின்னத்தை எதுவும் செய்ய விடமாட்டேன். இரட்டை இலையை எந்தக் காலத்திலும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலைக்கு ஆபத்து வர விடமாட்டேன். என் நிழலைக் கூட யாராலும் நெருங்க முடியாது. ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தீய சக்தியான திமுகவை வீழ்த்த ஒன்று கூட வேண்டும். 

I will bring AIADMK back under control... sasikala

2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும், அதிமுகவை மீண்டும் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒன்றாக அரசியல் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் தான் பிரச்சாரத்தின்போது தேர்தல் வாக்குறுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவார். 

I will bring AIADMK back under control... sasikala

நாம் சரியாக இருந்தால் நம்மை யாரும் கூற முடியாது. பெட்டியின் சாவியும் என்கையில் உள்ளது என்று கூறிய திமுக தற்போது அந்தத பெட்டியின் சாவியை தொலைத்துவிட்டதாக என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி மக்களை ஏமாற்றாமல் செய்ய முடிந்தவற்றை கூறினால் நன்றாக இருக்கும் என சசிகலா கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios