உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை தடை செய்த அறிவித்தபின், ஏறக்குறைய 50 நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


அப்போது ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப்படும், குறைந்தவட்டியில் கடன் தரப்படும் என்று பிரதமர் மோடி புதிய திட்டத்தை அறிவித்தார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் வங்கிச்சேவைகள் குறித்துக் கூறுகையில், “சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்பும் வீடு இல்லாமல் மக்கள் வாழ்கின்றனர்.


ஏழைகளுக்கு வீடு அளிக்க 2 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சொந்தவீடு கட்ட புதியதிட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, வங்கிகளில் ரூ.9 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு 4 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். 
 12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். 2 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு வட்டி குறைப்பு செய்யப்படும் என்றார்.