Asianet News TamilAsianet News Tamil

#BREAKING என்னா பேச்சு.. ஜாமீன்லாம் தர முடியாது.. எச்.ராஜாவை வெறுங்கையோடு திருப்பி அனுப்பிய நீதிமன்றம்..!

இந்த வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, அலறியடித்துக்கொண்டு முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

H. Raja bail petition dismissed.. madurai high court action
Author
Madurai, First Published Jul 19, 2021, 4:19 PM IST

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

புதுக்கோட்டை திருமயத்தில் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைப்பது தொடர்பாக போலீஸ் அனுமதி மறுத்தது. இதையடுத்து, விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காவல்துறை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து,  திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

H. Raja bail petition dismissed.. madurai high court action

இந்த வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, அலறியடித்துக்கொண்டு முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் விமர்சனம் செய்ததற்காக உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.  என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால், இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

H. Raja bail petition dismissed.. madurai high court action

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.ராஜா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. மேலும் இவ்வழக்கில் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios