6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட்... செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..!
தற்போதைய சூழலில், 6,7,8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில், 6,7,8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், ’’தற்போதைய சூழலில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 98.5 சதவீதமாக உள்ளது. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை. அதற்கு பதில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என அவர் தெரிவித்தார்.