Asianet News TamilAsianet News Tamil

கலெக்டர் ஆபிஸ் எதிரில் இலவச சிக்கன் பிரியாணி...!! விழுப்புரத்தில் முந்தியடித்த கூட்டம்...!!

இன்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் சிக்கன் பிரியாணி சமைத்து அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார் .  பிரியாணி இலவசமாக வழங்கப்படுவதை  அறிந்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர் . 

free chicken briyani distributed for public to awareness , for ,  corona virus will not affect if take chicken briyani
Author
Villupuram, First Published Mar 12, 2020, 5:03 PM IST

சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற பீதியில் உள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பொதுமக்களுக்கு பிரியாணி சமைத்து வழங்கப்பட்டது . கொரோனா அச்சத்தில்  பிராய்லர் கோழி விற்பனை கடுமையாக சரிந்துள்ளதையடுத்து கறிக்கோழி வளர்ப்போர் சங்கத்தின் சார்பில்  இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.   சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் சுமார் 100 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது .  சீனாவில்  இதுவரை 3113 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . 

free chicken briyani distributed for public to awareness , for ,  corona virus will not affect if take chicken briyani

உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் ,  தற்போது இந்தியாவில் வேகமாக பரவி  வருகிறது இந்நிலையில் 70க்கும் மேற்பட்டோர் வைரஸ்  தாக்குதலால் அவதிப்பட்டு வருகின்றனர் .  நாடு முழுவதும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில்  வைரஸை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . கை கழுவுவது குறித்து  பள்ளி ,  கல்லூரிகள்  மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியுள்ளது.   இதனால் கறிக்கோழி சாப்பிடுபவர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது .  பிராய்லர் இறைச்சி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . 

free chicken briyani distributed for public to awareness , for ,  corona virus will not affect if take chicken briyani

கறிக்கோழி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது .  எனவே சிக்கன்  சாப்பிடுவதால் கொரோனா  வைரஸ் பரவாது  என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடிவு செய்த கறிக்கோழி வளர்ப்போர் சங்கத்தினர் ,  இன்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் சிக்கன் பிரியாணி சமைத்து அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார் .  பிரியாணி இலவசமாக வழங்கப்படுவதை  அறிந்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர் .  இலவச பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது இதுகுறித்து தெரிவித்த அச்சங்க நிர்வாகிகள் பிராய்லர் கோழி சாப்பிடுவதால்  கொரோனா வைரஸ் பரவாது என்பதை இலவச பிரியாணி வழங்கி  விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக கூறினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios