முன்னாள் தமிழக கவர்னரும், முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சருமான ரோசய்யா இன்று காலமானார்.இவருக்கு வயது 88 ஆகும்.
ஆந்திர மாநில முதலமைச்சராக ரோசய்யா 2009-ம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார். தமிழக கவர்னராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை பணியாற்றி உள்ளார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்தவர்.

ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார். கடந்த 2011-2016 ஆண்டுகளில் தமிழகஆளுநராக பொறுப்பு வகித்தார். இவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் ரோசய்யா இன்று காலமானார். ரோசய்யா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
