Asianet News TamilAsianet News Tamil

ஷாக்கிங் நியூஸ்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 

former minister KP Anbalagan Daughter-in-law dies tvk
Author
First Published Jan 25, 2024, 9:06 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா(30) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்நிலையில், கே.பி.அன்பழகனின் மருமகள் கடந்த 18ம் தேதி தருமபுரி பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் பூர்ணிமா விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்ததில் பூர்ணிமா படுகாயமடைந்தார்.

இதையும் படிங்க;- கோயில் கட்டிவிட்டால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா? சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

இதையடுத்து அவரது குடும்பத்தினர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  வெளியேற்றப்பட்ட ஆம்னி பேருந்துகள்.. வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்- பொதுமக்கள் அவதி

Follow Us:
Download App:
  • android
  • ios