முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவை கைப்பற்ற சசிகலா முனைப்பு காட்டி வரும் நிலையில், சி.வி.சண்முகம் அவரை கடுமையாக விமர்சித்து வருவதுடன் சசிகலாவுக்கு எதிராக போலீசில் புகாரும் அளித்துள்ளார். இந்த விவகாரம் அதிமுகவுக்குள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
