அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை கங்கையில் குளித்தாலும் அவரது பாவம் தீராது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இன்று தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தின் போது பேசிய ஆர்.பி. உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நடத்தியது தர்மயுத்தம். தற்போது நடைபெறுவது துரோக யுத்தம் என கூறினார். எந்தக் கட்சியிலாவது கிளைக் கழகச் செயலாளர்கள் முதலமைச்சரான வரலாறு உண்டா?என்பதை ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

ஆயிரக் கணக்கான தொண்டர்கள் இன்று எங்களது அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கிறார்கள்.தேனி மாவட்டத்தில் கூட்டம் நடத்த முடியுமா? என்று குரல் கொடுத்து பார்த்தார்கள் உள்ளே வர முடியுமா? என்று கேள்வி கேட்டார்கள்.நம்பினோர் கெடுவதில்லை என்கின்ற வாக்குகிணங்க அண்ணன் எடப்பாடியார் அவர்களை நம்பி இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடி இருக்கிறது என கூறினார். ஓ.பன்னீர்செல்வம் சிரிக்கும் போதெல்லாம் நல்லவர் என்று தானே அம்மா உங்களுக்கு இந்த பதவிகளை கொடுத்தார். ஆனால் நீங்கள் சிரித்ததெல்லாம் துரோக சிரிப்பு என்பதை அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தற்போது கண்டு கொண்டுள்ளார். 

அதிமுக தலைமை அலுவலக பத்திரம் யாரிடம் உள்ளது..? திருட்டு புகாருக்கு காவல்நிலையத்தில் பதிலடி கொடுத்த ஓபிஎஸ் அணி

ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி ஒளிந்து கொள்வார். அவருக்கு பதவி பறிபோகிறது என்றால் தர்மயுத்தம் நடத்துவார்.அவரின் துரோகத்தை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு விட்டார்கள். இங்கே இருக்கக்கூடிய தொண்டர்களுக்கு தெரியும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு யார் பாடுபட்டது என்று. அவருக்கு தைரியம் இருந்தால் நாளையே அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும். அப்படி நடந்தால் நான் அரசியல் வாழ்வை விட்டு விலகத் தயார் என சவால் விடுத்தார். மு.க.ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஒரு ஆட்சி நடக்கிறது என்று ரவீந்திரநாத் கூறியது எந்த வகை நியாயம். திமுக என்னும் தீய சக்தியை ஒழிக்க அதிமுக இருக்கும் போது இவர் ஸ்டாலினை சந்தித்திருக்கலாமா? என கேள்வி எழுப்பினார். அதிமுகவில் இனி ஓ.பன்னீர்செல்லத்திற்கு வேலை இல்லை, தேனியிலும் வேலை இல்லை சென்னையில் இனி அவருக்கு வேலை இல்லை.நிச்சயம் பன்னீர்செல்வம் தேனியை காலி செய்து சென்றுவிடுவார். தமிழக மக்களை விட்டு பன்னீர்செல்வம் சென்றால் சரி என கூறினார். 

தேனி மாவட்டத்தில் இருந்து தான் அதிகப்படியான பொது குழு உறுப்பினர்கள் எடப்பாடி யாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களை நீக்கிவரும் பன்னீர்செல்வம் ஒரு கோடியே 99 லட்சம் தொண்டர்களையும் நீக்கி விட்டோம். நானும் என்னுடன் இருக்கும் நான்கு பேர் மட்டும் கட்சியில் தொடர்கிறோம் என ஒரு நாள் கூறுவார். அதிமுக கழக அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் குண்டர்கள் காலால் எட்டி உதைத்த சம்பவத்தை ஒருபோதும் தொண்டர்கள் மறக்க மாட்டார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் வணங்குகிற கோவிலை செருப்பு காலால் எட்டி உதைத்த பாவத்தை செய்த நீங்கள் எத்தனை கங்கையில் குளித்தாலும் உங்கள் பாவம் தீராது.10 வருட காலம் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய எனக்குத் தெரிந்து இவ்வளவு விரைவாக சீல் வைக்கப்பட்டது தலைமை அலுவலகம் தான். சட்டத்தின் வழியாக தற்போது தலைமை அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்ட போது தான் தெரிந்தது ஏராளமான நினைவுச் சின்னங்களும் பரிசு பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. 

ஓபிஎஸ் தொகுதியில் கெத்து காட்டும் இபிஎஸ்...! வெளி மாவட்ட தொண்டர்களை களத்தில் இறக்கி போராட்டம் நடத்த திட்டம்

ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி அத்தனை பொறுப்புகளையும் கொடுத்து இன்று அதிமுகவினர் ஏமாந்து நிற்கின்றனர். ஓ பன்னீர்செல்வத்தை நம்பி நீங்கள் சேர்த்துக் கொண்டால் அறிவாலயத்திலும் அந்த கொள்ளைக் கும்பல் வந்து கொள்ளையடிக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடியார் தலைமையில் மீண்டும் இந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் விரும்பினர். எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற செல்வாக்கை பார்த்து ஓ. பன்னீர்செல்வத்தால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அப்படியே மௌனம் சாதித்து இந்த இயக்கத்தை பின்னடைவு செய்ய விட்டார் என குற்றம்சாட்டினார். தேனி மாவட்டத்திற்காக அவர் என்ன செய்தார்? தன் சுயநலத்திற்காக மட்டும்தான் பாடுபட்டு இருக்கிறார்.கொங்கு மண்டலத்தில் 100% வெற்றி அதிமுகவிற்கு.மூன்று முறை முதலமைச்சராக இருந்த போதும் தேனி மாவட்டத்தில் ஒரு பாலம் கூட கட்டவில்லை . ஆனால் அவர் மட்டும் வீடு மேல் வீடு காடு மேல் காடு, தீவு மேல் வாங்கி....... அதற்கு மேல் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.எந்த ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்யவில்லை. தன்னுடைய போடி தொகுதியை மட்டும் தான் சுற்றி வந்த நீங்கள் தலைவரா?ஆனால் மீண்டும் அதிமுகவின் அரசு அமைய வேண்டும் என்று சூறாவளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி, பக்கத்து மாவட்டத்தில் கூட பிரச்சாரம் செய்யாத ஓ பன்னீர்செல்வம் தலைவரா?ஒருங்கிணைப்பாளரா? என ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்

எஸ்.பி. வேலுமணிக்கு தொடரும் சிக்கல்..! ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சோதனை நடத்தும் மாநகராட்சிஅதிகாரிகள்