அதிமுகவின் அடுத்த டார்கெட் ஆர்.எஸ்.பாரதி..! வழக்கு... தனிப்படை... கைது... என அடுத்தடுத்து ஸ்கெட்ச்!
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பொது மக்களோ, சமூக ஆர்வலர்களோ அல்லது எதிர் கட்சியினரோ அரசுக்கு எதிராக பேசிவிட்டால் உடனடியாக வழக்கு, சிறை என பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பொது மக்களோ, சமூக ஆர்வலர்களோ அல்லது எதிர் கட்சியினரோ அரசுக்கு எதிராக பேசிவிட்டால் உடனடியாக வழக்கு, சிறை என பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
அண்மையில் தூத்துக்கு துப்பாக்கி சூடு குறித்து ஐ,நா,அவையில் பேசனார் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று சமூச செயற்பாட்டாளர்கள் பியூஸ் மனுஷ், வளர்மதி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 26 ம் தேதி கோவை மாவட்டம் போரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் தமிழக அரசை அவதூறாக பேசியதாக திமுக அமைப்புப் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்எல்ஏ., கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.