Asianet News TamilAsianet News Tamil

தொடர் விடுமுறை.... சிறப்பு பேருந்துகளை அறிவித்து அமர்க்களம் படுத்தும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

ஆயுதப்பூஜை, தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

festival holiday... government special bus announcement
Author
Tamil Nadu, First Published Oct 1, 2019, 6:10 PM IST

ஆயுதப்பூஜை, தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆயுதப்பூஜையை முன்னிட்டு வருகின்ற 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறை வருவதால் சிறப்பு பேருந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

festival holiday... government special bus announcement

சென்னையில் இருந்து 3 நாட்கள் 6,145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் இருந்து 280 பேருந்துகளும், கோவையில் இருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை முடிந்த பிறகு அக்டோபர் 8 முதல் 9-ம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

festival holiday... government special bus announcement

அதேபோல், தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் 5 இடங்களில் அக்டோபர் 24, 25, 26-ம் தேதி வரை வரை சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவதற்கு அக்டோபர் 27 முதல் 30-ம் தேதி வரை வரை 4,627 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையம், மெப்ஸ், பூந்தமல்லி, தைதாப்பேட்டை உள்ளிட்டவைகள் தற்காலிக பேருந்து நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios