Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக கோஷ்டி.. ஆர்பாட்டத்தில் உடைபட்ட மாயை..!

மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்த அதிமுகவை சேர்ந்த சில உள்ளூர் தலைகள் திட்டம் போட்டு இந்த போட்டி கோஷத்தை தனியாக கோஷ்டி சேர்த்து நடத்தியுள்ளது. 

Faction against former minister Vijayabaskar .. the illusion broken in the demonstration
Author
Tamil Nadu, First Published Jul 29, 2021, 11:50 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை புறக்கணித்துவிட்டு, ஒரு குரூப் தனியாக நின்றது.  நிர்வாகிளை ஒதுக்கிவிட்டு, அமைச்சராக இருந்த காலத்தில் குரூப் சேர்த்து ஆட்டம் போட்டதுதான் இதற்கு காரணமாம். விஜயபாஸ்கர் மீதான தங்களின் வெறுப்பை எப்படி பதிவு செய்வது என்று தெரியாமல் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்த அதிமுகவை சேர்ந்த சில உள்ளூர் தலைகள் திட்டம் போட்டு இந்த போட்டி கோஷத்தை தனியாக கோஷ்டி சேர்த்து நடத்தியுள்ளது.

 Faction against former minister Vijayabaskar .. the illusion broken in the demonstration

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்ற மாயையை இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி இருக்கிறது என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாம். அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில், செயலாளராக இருக்கும் விஜயபாஸ்கர் தலைமையில் கட்சி ஆபீஸ் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிட்டிங் கூட்டுறவு வங்கித்தலைவர், மாவட்ட பால்வளத்தலைவர் உட்பட சில நிர்வாகிகள் வந்து கலந்து கொள்ளவில்லை. Faction against former minister Vijayabaskar .. the illusion broken in the demonstration

ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திலிருந்து சில அடி தூரம் தள்ளி நின்று, தனியாக கோஷம் போட்டார்கள். இதில் அவர்களின் ஆதரவாளர்கள் என்று சிலர் கலந்து கொண்டார்கள். கோஷ்டிபூசலை மறைக்க அதிமுகவினர் சொன்ன காரணம் தான் சிரிப்பை வரவழைப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கட்சியினரே சொல்லி சிரிக்கிறார்கள். அது கொரோனாவுக்காக சமூக இடைவெளியை கடைபிடிக்கவே தள்ளி நின்று கோஷம் போட்டோம்.. இதுல கோஷ்டிபூசல் எங்கிருந்து வந்தது? என்று கேள்வி கேட்டு சீறுகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios