தேர்தல் முடிவை தெரிஞ்சுக்க 6 மணி நேரம் லேட்டாகும் !! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !!
விவி பேட் ஒப்புகைச் சீட்டுக்களை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுவதால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மே 19 -ம் தேதி வரை மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இது தவிர 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில் , நாளை தேர்தல் முடிவுகள் வெளியிட 5 அல்லது 6 மணி நேரம் தாமதமாகலாம் என தகவ்ல வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன.
இதனால் மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை கால தாமதம் ஏற்படும். தபால் ஓட்டுகளை எண்ணி முடிப்பதற்கும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.