Asianet News TamilAsianet News Tamil

தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு... மகிழ்ச்சியில் அரசியல் தலைவர்கள்..!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கடைசி பிரசார நாளான ஏப்ரல் 4ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

election campaign until 7pm...satyabrata sahoo
Author
tamil nadu, First Published Mar 31, 2021, 7:12 PM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கடைசி பிரசார நாளான ஏப்ரல் 4ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அனைத்து  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 4ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய அவகாசம் வழங்கப்படும். இம்முறை அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கடைசி பிரசார நாளான ஏப்ரல் 4ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது. அதன் காரணமாக அரசியல் கட்சியினர் மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றார். 

 தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை  தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதையடுத்து அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios