கஜா  புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் திருவாரூர் பகுதிகளை நாளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.  இந்தப் பகுதிகளில் அமைச்சர்களுக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் சாலை வழியாக சென்று சேத பகுதிகளை பார்வையிட இருந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சுழன்றுஅடித்தபுயலுக்குதாக்குப்பிடிக்கமுடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம்மரங்களும், 40 ஆயிரம்மின்கம்பங்களும்சாய்ந்தன. மேலும்சுமார் 350 மின்மாற்றிகளும்சேதம்அடைந்துஉள்ளன. இதுதவிர 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும்அதிகமானவீடுகள்சேதம்அடைந்துஇருக்கின்றன.

புயலில்பலியானவர்களின்குடும்பங்களுக்குதலாரூ.10 லட்சமும், படுகாயம்அடைந்தவர்களுக்குதலாரூ.1 லட்சமும், சாதாரணகாயம்அடைந்தவர்களுக்குதலாரூ.25 ஆயிரமும்வழங்கப்படும்என்றுமுதல்-அமைச்சர்எடப்பாடிபழனிசாமிஅறிவித்துஉள்ளார்.

இதேபோல்உயிர்இழந்தமாடுகளுக்குதலாரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்குரூ.3 ஆயிரமும்வழங்கப்படும்என்றுஅறிவித்துஇருக்கிறார்.

இதனிடையே புயல் வருவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டினர். ஆனால் மீட்புப் பணிகள் சிறப்பாக இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. குறிப்பாக புயல் வந்து சென்று 4 நாட்கள் ஆகியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு போகவில்லை என அம்மாவட்டங்களில் உள்ள கொந்தளித்துப் போயுள்ளனர்.

சேத பகுதிகளை பார்வையிட சென்ற ஓ.எஸ்.மணியனை பொது மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர். இதே போல் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், கடம்பூர் ராஜுஇ வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோரையும் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடந்த இரண்டு நாட்களாக சேத பகுதிகளை பார்வையிடப்போவதாக அறிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி அந்த நிகழ்ச்சிகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். பொது மக்களை சந்திகக்க எடப்பாடி பயப்படுகிறார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

கஜாபுயலால்பாதிப்புஏற்பட்டபகுதிகளைஹெலிகாப்டர்மூலம்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிநாளைபார்வையிடுகிறார். சென்னையிலிருந்துவிமானம்மூலம்திருச்சிசெல்லும்எடப்பாடி அங்கிருந்துஹெலிகாப்டர்மூலம்புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர்மற்றும்நாகையில்புயல்சேதபகுதிகளைபார்வையிடுகிறார்சாலை வழியாக செல்லும் திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.