Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் இ-பாஸ் தொடருமா... மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு..!

மத்திய அரசு நிறுத்தியும் தமிழகத்தில் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டது மனித உரிமை மீறலாகாதா? என மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

E pass in Tamil Nadu ... Human Rights Commission orders action
Author
Tamil Nadu, First Published Aug 10, 2020, 3:30 PM IST

மத்திய அரசு நிறுத்தியும் தமிழகத்தில் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டது மனித உரிமை மீறலாகாதா? என மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

E pass in Tamil Nadu ... Human Rights Commission orders action

இந்த நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இ-பாஸ் இனி, பணி நிமத்தம், வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, வழக்கமாக வழங்கப்படும் இ பாஸ்களை விட 36 சதவீதம் அதிகமாக பாஸ்கள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.

E pass in Tamil Nadu ... Human Rights Commission orders action

ஆனால் மத்திய அரசு இ-பாஸ் தேவையில்லை என கூறிய நிலையில் தமிழகத்தில் இ-பாஸ் இன்னும் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயலா? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் நான்கு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios