Asianet News TamilAsianet News Tamil

'நீங்க என்ன பெரிய அமைச்சரா..?' செந்தில் பாலாஜியை திடுக்கிட வைத்த துரைமுருகன்..!

22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்று முதல்வருக்கு துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

Duraimurugan asking senthil balaji
Author
Tamil Nadu, First Published May 12, 2019, 4:57 PM IST

22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்று முதல்வருக்கு துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.Duraimurugan asking senthil balaji

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசாரச்சாரம் செய்த அவர், ’’இந்த கூட்டத்திற்கு வருமாறு செந்தில்பாலாஜி என்னை அழைக்கும்போது, வீடற்ற 25 ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்குவதாக கூறினார். நீங்கள் என்ன மந்திரியா? எனக் கேட்டேன், உடனே அவர் தனது சொந்த நிதியில் நிலம் வழங்குவதாக கூறினார். மக்களுக்கு செய்ய வேண்டிய அமைச்சர்களே செய்யாத போது இப்படி ஒரு வேட்பாளரை நான் இதுவரை பார்த்தது இல்லை. 11 முறை தேர்தலில் நின்ற நானே இவரிடம் பாடம் படிக்கணும். அவர் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால்தான் அவரை திமுகவிற்கு அழைத்து வந்து விட்டோம்.Duraimurugan asking senthil balaji

இந்த இடைத்தேர்தலோடு எடப்பாடியின் முதல்வர் பதவி முடிவுக்கு வரப்போகிறது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று சொன்னதுக்கே சசிகலா அவரின் முதல்வர் பதவியை பறித்து விட்டார். ஆனால் நாங்கள் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வருகிறோம்.Duraimurugan asking senthil balaji

துரைமுருகன் என்பது தனிப்பட்ட சக்தி அல்ல. கட்சியின் பொருளாளர், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும், பல தேர்தல்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த தேர்தலில் அதிகப் படியான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறது. இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா?’’ என எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் சவால் விட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios