‘மாண்புமிகு’ அமைச்சரே! கடந்த நூறு நாட்களாக முடங்கிக் கிடக்கும் தொழிலுக்கு என்ன செய்தீர்கள் நீங்கள்? ஊரடங்கு, ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று திட்டமில்லாமல் திட்டமென்ற பெயரில் செய்த குழப்பங்களால், குளறுபடிகளால் கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற தொழில்நகரங்களே பிழைக்க வழி தெரியாமல் மூச்சுத் திணறுகின்றனவே, அதற்கு என்ன வழிவகைகளை வைத்திருக்கிறீர்கள்?
‘கலெக்ஷனில்’ மட்டுமே குறியாக இருக்கும் அமைச்சர் தங்கமணி மின்வாரியக் கட்டணத்தில் இருக்கும் படிமுறையை முறைப்படி கணக்கிட்டு இருந்திருந்தால் மின் கட்டணம் ஏழை எளிய மக்களுக்கு வெகுவாக குறைந்திருக்கும் என்று திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்திருக்கிறார்.

மின் கட்டண விவகாரத்தில் அமைச்சர் தங்கமணிக்கும் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கும் இடையே அறிக்கை போர் நடந்துவருகிறது. ஏற்கனவே மின் கட்டணத்தில் பகல் கொள்ளை அடிக்கிறார்கள் என்று திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் தங்கமணி தங்கள் இருப்பைக் காட்டிகொள்ள இதுபோன்ற அவப்பழியை அரசு மீது திமுக சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்தார். இந்நிலையில் அந்த அறிக்கைக்கு பதிலடியாக செந்தில் பாலாஜி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

