மக்களுக்கு திமுக துரோகம் செய்கிறது... அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!
தண்ணீர் கேட்டு போராட திமுகவுக்கு தார்மீக உரிமையில்லை. ஜோலார்பேட்டை நீர் தண்ணீர் வரக்கூடாது என்பது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம் என அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக சாடியுள்ளார்.
தண்ணீர் கேட்டு போராட திமுகவுக்கு தார்மீக உரிமையில்லை. ஜோலார்பேட்டை நீர் தண்ணீர் வரக்கூடாது என்பது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம் என அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ’’தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய முதல்வர் பழனிசாமி தலைமையில் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது தவறு. அது திமுக மக்களுக்கு செய்யும் துரோகம்" என அவ தெரிவித்தார்.