அதிமுக சரியாக சட்டம் இயற்றி, தாக்கல் செய்து இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, முதல்வர் ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியிருக்க வேண்டும்.

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு திமுக அரசு சரியாக வாதாடாததே காரணம். மூத்த வழக்கறிஞரை கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முழு தரவுகளை திமுக அரசு தாக்கல் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக அரசுதான் காரணம். இந்த விவகாரம் குறித்து அதிமுக சரியாக சட்டம் இயற்றி, தாக்கல் செய்து இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, முதல்வர் ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியிருக்க வேண்டும். முழு தரவுகளை திமுக தாக்கல் செய்யப்படவில்லை. அந்த அறிக்கை தாக்கல் செய்திருந்தால், அனைத்து விவரங்களும் அதில் உள்ளது. 

உயர் நீதிமன்றக் கிளையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியே சரியான தரவுகள் கொடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், அரசாங்கத்தின் மீதுதானே தவறு. எது எதற்கோ மூத்த வழக்கறிஞரை வைக்கிறார். இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், அதிமுக அரசு கொண்டு வந்த அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு இதை நிறைவேற்றக் கூடாது என்ற அடிப்படையில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றத்தில் வாதாடாத காரணத்தால்தான், இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அதிமுக இந்த விவகாரத்தில் சரியான முறையில் அதிகாரிகளை நியமித்துதான் இந்த இடஒதுக்கீட்டை அறிவித்தோம்.

இதுதொடர்பான முழு தரவுகளை மதுரை கிளையில் தாக்கல் செய்யவில்லை. மேல்முறையீடு செய்யும்போது அதைவைத்துதான் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். வழக்கை விசாரித்த நீதிபதியே சரியான தரவுகளை தாக்கல் செய்யவில்லை என்று கூறிவிட்டார்.