Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடிக்கு சிக்கல்!! நெடுஞ்சாலை டெண்டர் கேஸில் திமுக கேவியட் மனு...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் கொடுப்பதில் அளவற்ற முறையில் லஞ்சம் கொடுப்பதாக கூறி திமுக தரப்பில்  வழக்கு தொடரப்பட்டது. 

DMK File case against Edappadi palanisamy
Author
Chennai, First Published Oct 13, 2018, 1:25 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் கொடுப்பதில் அளவற்ற முறையில் லஞ்சம் கொடுப்பதாக கூறி திமுக தரப்பில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.  இந்த வழக்கை தொடர்ந்த திமுக அமைப்பு செயலாளரும் ஆர். எஸ் பாரதி MP எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இது ஆளும் அரசுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும்  சிக்கலை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.

நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடாக உறவினர்களுக்கு எடப்பாடி வழங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். 3 மாதத்தில் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.

DMK File case against Edappadi palanisamy

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இலாகாவான நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வழங்கக்கூடிய ஒப்பந்த பணிகள், கிட்டதட்ட 5 திட்டங்கள் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகளில் சம்பந்தி சுப்பிரமணியம், நண்பர் நாகராஜன் செய்யாதுரை, சேகர் ரெட்டி, இவர்களுக்கு வழங்கியுள்ளா. அப்போது முறைகேடு நடந்துள்ளது. உறவினர்கள், நண்ர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. என்ற புகார் திமுக புகார் செய்தது. 

DMK File case against Edappadi palanisamy

இந்த வழக்கின் விசாரணை ஜகதீஷ் சந்திரா முன் விசாரணை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை நியாயமாக இருக்காது, நேர்மையாக இருக்காது என்று திமுக வழக்கறிஞர் சார்பில் வாதிட்டார். இந்த முறைகேடு புகார் குறித்து  CBI விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முதல்வர் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.

முதலமைச்சருக்கு எதிரான வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால், தங்களுக்கு தெரிவிக்க வேண்டும், திமுக தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யவுள்ள நிலையில் திமுக செக் வைத்துள்ளது எடப்பாடிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கரை தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக வழக்கு போட்டுள்ள நிலையில், ஆளும் அரசுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மேலும், சிக்கலை உருவாக்கும் என சொல்லப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios