Asianet News TamilAsianet News Tamil

மாந்தோப்பில் பிறந்த நாளுக்காக விருந்துக்கு ஒன்றிணைத்த திமுக பிரமுகர்... பலருக்கும் கொரோனா தொற்று..!

முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், 19-ஆம் தேதி தமது 50-வது பிறந்த நாளை மாந்தோப்பு ஒன்றில் 100-க்கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைத்துக் கொண்டாடியுள்ளார். 
 

DMK celebrates birthday in Mango Garden
Author
Tamil Nadu, First Published Jun 23, 2020, 9:26 AM IST

முழு ஊரடங்கின்போது தனது பிறந்த நாளை கொண்டாடி ஒன்றிணைவோம் வா என அழைத்து  கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக துணை சேர்மன் வைத்த விருந்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.DMK celebrates birthday in Mango Garden

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராக இருப்பவர் குணசேகரன். திமுகவில் பொதுக் குழு உறுப்பினரான இவர் கொரோனாவால் கடந்த 19-ஆம் தேதி முதல், முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், 19-ஆம் தேதி தமது 50-வது பிறந்த நாளை மாந்தோப்பு ஒன்றில் 100-க்கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைத்துக் கொண்டாடியுள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் பிறந்த நாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DMK celebrates birthday in Mango Garden

பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குணசேகரன், 6 வருடங்களுக்கு முன்பு செம்மரக்கடத்தல் வழக்கில் சிறைக்குச் சென்றவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Follow Us:
Download App:
  • android
  • ios