தூது மேல் தூது விடும் திமுக வேட்பாளர்... நரசிம்மன் காலில் விழுந்த அரி..!
நரசிம்மன் சென்னைக்கு வண்டியை கிழப்பி இருக்கிறார். அவரை சரிக்கட்டி, பிரசாரத்துக்கு அழைத்து வருவதற்காக அரி தரப்பு, கட்சி முக்கிய புள்ளிகளை, துாது மேல் துாது விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
திருத்தணி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நரசிம்மன் மீண்டும் சீட் கேட்டும், கிடைக்கவில்லை. அரக்கோணம் முன்னாள் எம்.பி.,யான அரிக்கு கொடுத்து விட்டார்கள். ஏற்கனவே, கட்சிக்குள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். சீட் வாங்கிய அரி, தன் ஆதரவாளர்களுடன், சமீபத்தில் நரசிம்மன் வீட்டுக்கு போய் இருக்கிறார்.
கால் மணி நேரமால கதவை தட்டியும், திறக்கவில்லை நரசிம்மன். பிறகு வேண்டா வெறுப்பாக வெளியில் வந்த நரசிம்மனின் காலில் விழுந்து, 'என்னை ஜெயிக்க வைக்கணும்' எனக் கேட்டதற்கு மையமாக் தலையை ஆட்டிவிட்டு போயிருக்கிறார் நரசிம்மன். பிறகு நரசிம்மன் சென்னைக்கு வண்டியை கிழப்பி இருக்கிறார். அவரை சரிக்கட்டி, பிரசாரத்துக்கு அழைத்து வருவதற்காக அரி தரப்பு, கட்சி முக்கிய புள்ளிகளை, துாது மேல் துாது விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.