வில்லிவாக்கத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜயகாந்துக்கு கட்சி தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். பொதுமக்களும் விஜயகாந்தைக் காண திரண்டிருந்தனர். பேசுவதற்கு சிரமப்பட்டலும் தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபட்டார்.  

ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டால் ஏமாந்துபோவீர்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேசினார்.
உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வு எடுத்துவந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், எப்போது பிரசாரம் செய்வார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர் பிரசாரத்துக்கு வராமல் இருந்தது அக்கட்சி தொண்டர்களையும் வேட்பாளர்களையும் சோர்வடைய செய்திருந்தது. மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு சென்னையில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று மாலை சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


வில்லிவாக்கத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜயகாந்துக்கு கட்சி தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். பொதுமக்களும் விஜயகாந்தைக் காண திரண்டிருந்தனர். பேசுவதற்கு சிரமப்பட்டலும் தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபட்டார். 
வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு ஆதரவாக பெரவள்ளூரில் விஜயகாந்த் பேசும்போது, “திமுக தலைவர் ஸ்டாலினை நம்பி யாரும் தேர்தலில் வாக்களிக்காதீங்க. அவரை நம்பி வாக்களிச்சா ஏமாந்துடுவீங்க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். அதேபோல நல்ல உள்ளம் படைத்த வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜூக்கு முரசு சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள்” என்றார்.