இரட்டை குழல் துப்பாக்கி இருக்கட்டும் - அதில் குண்டு இருக்கின்றதா? இல்லையா? நறுக் கேள்விகளால் துளைக்கும் மன்னார்குடி தோட்டா...
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நாப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ள தினகரனுக்கு மன்னார்குடி குடும்பத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. சசிகலா சிறைக்கு சென்றதிலிருந்து சசியின் குடும்பத்திலிருந்து அவரின் அரசியல் வாரிசாக கருதப்படும் தினகரனுக்கு ஆதரவாக திவாகரன் மகன் ஜெயானந்த் இருந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக ஆளும் கட்சியை தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த இடைதேர்தலயடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.கே.நகரில் வாக்கு பதிவிற்கு முதல்நாள் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டார் தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல். இந்த வீடியோ விவகாரத்தில் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா மற்றும் மகன் விவேக் தினகரனுக்கு எதிரான கருத்தை கூறிவந்தனர் ஆனால் திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் தினகரனுக்கு ஆதரவாகவே இருந்தார்.
இந்நிலையில் நேற்று வெளியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் மெகா வெற்றியை கைப்பற்றியுள்ளதால் தினகரனுக்கு ஆதராவாக திவாகரன் மகன் ஜெயானந்த் தமது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், ஈபிஎஸ்,ஓபிஎஸ், படத்தைப் போட்டு கீழே, 'இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் - எடப்பாடி பழனிச்சாமி' என குறிப்பிட்டிருக்கிறார். அதன் கீழே தினகரன், தமது படத்தை போட்டு, இரட்டை குழல் துப்பாக்கி வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் - அதில் குண்டு இருக்கின்றதா? இல்லையா? என ஜெய் ஆனந்த் திவாகரன் படம் போட்டு கலாய்த்துள்ளார். ஜெய் ஆனந்தின் இந்த பதிவு அவரது ஆதரவாளர்களிடையே வைரலாக பரவி வருகிறது.