Asianet News TamilAsianet News Tamil

தனுஷ்... குழந்தைகளைவிட சுகம்தான் முக்கியமா..?? தூக்கிபோட்டு சாத்தும் கே. ராஜன்..

இருவரும் இந்த அளவுக்கு வெறுத்துக் கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நல்ல மனமும் உயர்ந்த குணமும் தான் வாழ்க்கையில் சொத்து பணம் அல்ல, பெயர் கெட்டுப்போனால் பணம் சம்பாதித்தும் பலன் இருக்காது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களே சினிமா துறையை கேவலமாக பேசுவார்கள், திரைக்கதையில் என்ன ஹீரோயிஸம் செய்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது.

Dhanush ... Is happiness more important than children .. ?? K. Rajan Asking ..
Author
Chennai, First Published Jan 19, 2022, 6:33 PM IST

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது குழந்தைகளுக்காக விவாகரத்து முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கே.ராஜன் வலியுறுத்தியுள்ளார் 18 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திடீரென விவாகரத்து செய்தால் மக்கள் தனுசை கொஞ்சம் கூட மதிக்க மாட்டார்கள், கேவலாமாக பேசுவார்கள் என்றும், குழந்தைகளை விட உங்களுக்கு அப்படி என்ன சுகம்.? குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்கள் பிரிவதற்கான உண்மை காரணங்கள் குறித்து தகவல் இல்லை. ஆனாலும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் விவாகரத்துக்கான காரணங்கள் என பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதில் பெரும்பாலான தகவல்கள்  நடிகர் தனுஷின் நடவடிக்கைகளை குறை சொல்வதாகவே உள்ளது. திருமணமான பிறகும் தனுஷ் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவரைக் குறித்து ஊடகங்களில் வெளிவருகின்ற கிசுகிசுக்கலால் ஐஸ்வர்யா மனம் உடைந்து போனதே இருவருக்கும் இடையேயான விரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  அதே நேரத்தில் திருமணம் ஆனது முதலே நடிகை ஐஸ்வர்யா தான் சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற மன நிலையிலேயே, இருந்து வந்தார், கணவருடன் இருந்ததைக் காட்டிலும் அவர் தாய் வீட்டில் இருந்ததுதான் அதிகம், தனுசுக்கு உரிய மரியாதையை அவர் கொடுக்கவில்லை, இது தான் ஐஸ்வர்யா மீது  தனுஷுக்கு வெறுப்பு ஏற்பட காரணம் என்றும் அது நாளடைவில் அதிகரித்து விவாகரத்து நிலை வரை வந்துள்ளது என்றும் செய்திகள் அடிபடுகின்றன.

Dhanush ... Is happiness more important than children .. ?? K. Rajan Asking ..

இதே போன்ற ஒரு கருத்து மோதல் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டதாகவும், அப்போதே இருவரும் விவாகரத்து முடிவுக்கு சென்றதாகவும் குடும்பத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் சேர்ந்து வாழ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தனுஷின் நடவடிக்கைகள் குறித்து அவரது மனைவிக்கு நேரடியாக பல புகார்கள் வந்ததாகவும், அதனடிப்படையில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவே ஒரு நடிகையை தொடர்புகொண்டு பேசியதாகவும், ஆனால் அந்த நடிகை அதை தனுஷிடம் போட்டுக் கொடுக்க அன்று முதல் இருவருக்கும் இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஒரு சில மாதங்களாக இருவரும்  பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பிரச்சனையை நடிகர் ரஜினிகாந்த் அறிந்திருந்தாலும் விரைவில்  சரியாகிவிடும் என காத்திருந்தார். இதற்கிடையில் இருவரையும் அழைத்து தனித் தனியாக பேசியதுடன், இரண்டு குழந்தைகள் இருக்கிறது குழந்தைகளுக்காக யோசித்துப் பாருங்கள் என அவர் இருவருக்கும் அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

இருவருமே அதை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில்தான் இருவரும் தனித்தனியாக பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் பலரும் இதை பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையல் தயாரிப்பாளர் கே.ராஜன் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து விட்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு திடீரென பிரிவதும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அவகாசம் தேவை என்று கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது என விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மேலும்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில், குழந்தைகளுக்காக மனக் கசப்புகளை மறந்து இருவரும் சேர்ந்து வாழ கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார் மேலும் அவர்  அதில் கூறியிருப்பதாவது:- 

Dhanush ... Is happiness more important than children .. ?? K. Rajan Asking ..

இந்தப் பிரிவு என்பது நடந்திருக்க கூடாது, ரஜினிகாந்த் நாகரிகமான மனிதர், அவரது குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் இருவரின் திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்தியவன் நான், 18 வருடம் வாழ்ந்து, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து இப்போது பிரிந்து செல்வதாகவும், புரிந்துகொள்ள அவகாசம் வேண்டும் என கூறுகின்றனர். 18 வருடம் புரிந்துகொள்ளாத இவர்கள் இனி என்ன புரிந்து கொள்ளப் போகிறார்கள்? நமது தமிழ்ப் பண்பாட்டில் இப்படி இல்லவே இல்லை, ஆனால் இப்படி ஒரு முடிவை எடுப்பது தனுஷின் திரையுலக வாழ்க்கைக்கு சறுக்கலாக முடியும். ரஜினி நல்ல மனிதர், அவருக்கு மன அமைதி கிடைக்க வேண்டும்,  ஐஸ்வர்யா தனுஷ் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். அழகான இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அந்த பிள்ளைகளுடைய கதியை நினைத்து பார்க்கவேண்டும். இந்த வயதில் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டும், இந்த நேரத்தில் பிரிகிறோம் என்று சொல்வது அக்கிரமம். ரஜினியின் குடும்பத்தின் மீது அக்கறை உள்ள பெரியவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க வேண்டும்.

Dhanush ... Is happiness more important than children .. ?? K. Rajan Asking ..

இருவரும் இந்த அளவுக்கு வெறுத்துக் கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நல்ல மனமும் உயர்ந்த குணமும் தான் வாழ்க்கையில் சொத்து பணம் அல்ல, பெயர் கெட்டுப்போனால் பணம் சம்பாதித்தும் பலன் இருக்காது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களே சினிமா துறையை கேவலமாக பேசுவார்கள், திரைக்கதையில் என்ன ஹீரோயிஸம் செய்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது. 18 வருஷம் வாழ்ந்துவிட்டு மனைவி விவாகரத்து செய்து குழந்தைகளை அனாதையாக விட்டு வந்தவர் என்று விமர்சிப்பார்கள். எனவே தனுஷ் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். திருமணம் என்பது இரு மனமும் ஒருங்கிணைந்து ஒரு மனம். 18 வருடம் வாழ்ந்து விட்டு பிரிந்து சென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், துச்சமென மதிப்பார்கள், கேவலமான பேசுவார்கள். குழந்தைகளை யோசித்துப் பார்க்காமல் அப்படி என்ன உங்களுக்கு சுகம்?  குழந்தைகளை மீறி மனமாற்றம் எப்படி வரும்? குழந்தைகளுக்காக சேர்ந்து வாழக் கூடாதா? இந்த குழந்தைகளின் கதி என்ன? அந்த குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். உங்களை நம்பி தானே திருமணம் செய்து வைத்தார் ரஜினி, புகழ்பெற்ற ஒரு நடிகர், அவருக்கே இந்த அநியாயம் செய்கிறீர்கள். இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா? அப்படி என்றால் உங்களிடம் என்ன மனித தன்மை இருக்கிறது? என்று கே.ராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios