Asianet News TamilAsianet News Tamil

அசுர பலம் பெறும் அதிமுக !! இணைகிறது தீபா பேரவை .. ஓபிஎஸ் , இபிஎஸ்க்கு கடிதம் அனுப்பிய தீபா மற்றும் மாதவன் ..

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா , தனது இயக்கத்தை அதிமுகவில் இணைக்க விரும்புவதாக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு கடிதம் அனுப்பியுள்ளனர் .

deepa is going to merge her party with admk
Author
Tamil Nadu, First Published Aug 19, 2019, 3:07 PM IST

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா . ஜெயலலிதா மறைந்த பிறகு இவரும் ஒரு கட்சி தொடங்கி , அவரின் அரசியல் வாரிசு தான் தான் என அறிவித்து கொண்டார் . எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என கட்சி நடத்தி வந்தார் .

deepa is going to merge her party with admk

இந்த நிலையில் தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் மாதவன், எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கினார் . பின்னர் இருவரும் சமாதானம் ஆகி , இரண்டு கட்சிகளையும் இணைத்து கொண்டனர் .

தற்போது தீபாவும் மாதவனும் சேர்ந்து அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர் .அதில் அம்மா இறந்த போது அலைகடலென தொண்டர்கள் திரண்டு வந்து தன்னை அரசியலுக்கு அழைத்ததால் தான் கட்சி தொடங்கியதாகவும் , அதே தொண்டர்கள் இப்போது அதிமுகவில் இணைய கூறுவதால் , தாய் கழகத்தோடு இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளார் .

deepa is going to merge her party with admk

அதில் தீபா மற்றும் மாதவன் இருவரும் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள்  துணைப் பொதுச்செயலாளர்  என முறையே  கையெழுத்து போட்டு உள்ளனர் .

Follow Us:
Download App:
  • android
  • ios