Asianet News TamilAsianet News Tamil

கழுத்தை நெறிக்கும் கடன்.. வேறுவழியில்லாமல் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட காங்கிரஸ் பிரமுகர்.!

 கடன் பிரச்சனையும் அதிகரிக்கவே கடந்த சில நாட்களாகவே கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் ஹரிஷ் சந்த் வீட்டில் இருந்தார். அப்போது, சமையலறையில் இருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். 

Debt harassment...Chennai West District Congress leader committed suicide
Author
Chennai, First Published Oct 13, 2021, 5:48 PM IST

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் சந்த் (55). இவர் எம்கேபி நகர் 3வது மெயின் ரோடு பகுதியில் பாலாஜி ரெடிமேட் என்ற பெயரில் துணிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும் ஜெயஸ்ரீ, நேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த ஜெயஸ்ரீக்கு திருமணம் முடிந்து தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இவர் வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் இருந்து வந்தார். 

Debt harassment...Chennai West District Congress leader committed suicide

கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கினால் இவரது துணிக்கடையில் வியாபாரம் பெரிதளவில் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே அவரது 2வது மகள் நேகாவுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது மகள் திருமணத்துக்கு தேவையானவற்றை செய்வதற்கு போதிய பணமின்றி ஹரிஷ் சந்த் தவித்து வந்துள்ளார். அவருக்கு கடன் பிரச்சனையும் அதிகரிக்கவே கடந்த சில நாட்களாகவே கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் ஹரிஷ் சந்த் வீட்டில் இருந்தார். அப்போது, சமையலறையில் இருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

Debt harassment...Chennai West District Congress leader committed suicide 

அவரது அலறல் சத்தம் கேட்டு நேகாவும் உறவினர்களும் ஓடிவந்து மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஹரிஷ் சந்த் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios