திமுக அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று... அலறும் அமைச்சரவை..!
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால்,வைரஸ் அதிக அளவில் மாறுபாடு அடையும் வாய்ப்புள்ளதால், தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசி, தொற்றுக் கிருமியைக் கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சட்டபேரவை முதல்வர் அலுவலகம் இன்று மூடல்; அலுவலக ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுபேற்றுள்ளார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சிவசங்கரனை தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.