Asianet News TamilAsianet News Tamil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... எச்.ராஜா நேரில் ஆஜர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

contempt of court case... h.raja appears
Author
Chennai, First Published Oct 22, 2018, 10:11 AM IST

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதையும் மீறி விநாயகர் சிலையை எடுத்துச் செல்வோம் என எச்.ராஜா கூற, அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். contempt of court case... h.raja appears

இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் அதிகாரிகளையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. contempt of court case... h.raja appears

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது. contempt of court case... h.raja appears 

இந்த வழக்கில் தன்னை பற்றி விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று எச்.ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios