Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் எம்.எல்.ஏ., தொகுதியில் பரபரப்பு... சொந்தக் கட்சியினரே சூடு கிளப்பும் விவகாரம்..!

தங்களது தொகுதி எம்.எல்.ஏ.,வை காணவில்லை என நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சுவர் விளம்பரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Congress MLA, agitation in the constituency ... the issue of heating up one's own party
Author
Tamil Nadu, First Published Sep 23, 2021, 6:30 PM IST

தங்களது தொகுதி எம்.எல்.ஏ.,வை காணவில்லை என நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சுவர் விளம்பரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Congress MLA, agitation in the constituency ... the issue of heating up one's own party

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நாங்குநேரியில் போட்டியிட்டாலும் தொழில்களும், குடும்பமும் சென்னையில் இருந்து வருகின்றன. இதனை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட ரூபி மனோகரனுக்கு வாய்ப்புத் தரக்கூடாது என உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். Congress MLA, agitation in the constituency ... the issue of heating up one's own party

தற்போது, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ரூபி மனோகரன் தொகுதிப் பக்கம் வரவும் இல்லை, மக்களிடம் கோரிக்கைகளை கேட்கவும் இல்லை என அந்த காங்கிரஸ் பிரமுகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் நாங்குநேரி பேருந்து நிலைய சுற்றுச்சுவரில் ‘எம்.எல்.ஏ.வை’என சுவர் விளம்பரம் செய்துள்ளனர். ’வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன், சொன்ன சொல்லை தவறமாட்டாரு ரூபி மனோகரன்’காணாமல் போன இவரை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் இப்படிக்கு ஐயப்பன் என எழுதப்பட்டுள்ளது. சொந்தக் கட்சியினரே தங்கள் கட்சி எம்.எல்.ஏவை காணவில்லை என விளம்பரம் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios