தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு அப்டேட்
தமிழகத்தில் இன்று மேலும் 2,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,95,483ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) 72,236 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 2708 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் 747 பேருக்கு தொற்று உறுதியானது.
எனவே தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13,95,483 ஆகவும், சென்னையில் 1,96,378 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துவிட்டது. தமிழகத்தில் 29,268 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 4,014 பேர். டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,71,489ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவிற்கு 32 பேர் உயிரிழந்ததையடுத்துஉயிரிழப்பு எண்ணிக்கை 10,956ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,599 பேர் உயிரிழந்துள்ளனர்.