Asianet News TamilAsianet News Tamil

புற்றுக்கு வெந்நீர் ஊற்றியதால் நாகங்கள் கதறுகின்றன... குடியுரிமை போராட்டத்தை எதிர்த்து எச்.ராஜா சர்ச்சை ட்வீட்..!

புல்வாமாவுக்கு பொங்காதவர்கள், நாட்டின் அச்சுறுத்தலுக்கு பொங்காதவர்கள். ஆம் எத்தனையோ முறை பாகிஸ்தான் இங்கு குண்டுவெடிப்பை செய்தபொழுது பொங்காதவர்கள், சீன ஊடுருவலுக்கு பொங்காதவர்கள். இப்பொழுது அந்நிய நாட்டுக்காரனை வெளியேற்றுவோம் என்றவுடன் வருகின்றார்கள் பார்த்தீர்களா? விஷயம் வேறோன்றுமில்லை, புற்றுக்கு வெந்நீர் ஊற்றியாயிற்று நாகங்கள் வெளிவருகின்றன, குழவி கூட்டை கலைத்தாயிற்று குளவிகள் அலறி அடித்து பறக்கின்றன.

Citizenship Bill is a struggle...h raja controversy twitt
Author
Tamil Nadu, First Published Dec 20, 2019, 12:14 PM IST

மசூதிகளில் நமாஸ் செய்துவிட்டு வெளியே வந்து பஸ்களை கொளுத்துவது வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். 

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். 

Citizenship Bill is a struggle...h raja controversy twitt

அதில், மசூதிகளில் நமாஸ் செய்துவிட்டு வெளியே வந்து பஸ்களை கொளுத்துவது வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்றும், புல்வாமாவுக்கு பொங்காதவர்கள், நாட்டின் அச்சுறுத்தலுக்கு பொங்காதவர்கள். ஆம் எத்தனையோ முறை பாகிஸ்தான் இங்கு குண்டுவெடிப்பை செய்தபொழுது பொங்காதவர்கள், சீன ஊடுருவலுக்கு பொங்காதவர்கள். இப்பொழுது அந்நிய நாட்டுக்காரனை வெளியேற்றுவோம் என்றவுடன் வருகின்றார்கள் பார்த்தீர்களா? விஷயம் வேறோன்றுமில்லை, புற்றுக்கு வெந்நீர் ஊற்றியாயிற்று நாகங்கள் வெளிவருகின்றன, குழவி கூட்டை கலைத்தாயிற்று குளவிகள் அலறி அடித்து பறக்கின்றன.

Citizenship Bill is a struggle...h raja controversy twitt

வளையினை வெட்டியாயிற்று கருந்தேள்கள் வீதிக்கு வருகின்றன, குளத்தை கலக்கியாயிற்று முதலைகள் கரைக்கு ஓடிவருகின்றன‌. விஷ விருட்சத்தை வெட்டியாயிற்று, நச்சு பறவைகள் அலை மறிக்கின்றன. தேசம் அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துகொண்டே இருக்கின்றது, அரசு செய்யவேண்டியதை மிக வேகமாக செய்யட்டும் என்றும் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.   

Follow Us:
Download App:
  • android
  • ios