Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் வாஜ்பாயை அழைக்க டெல்லிக்குப் போகும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... அமைச்சரின் உளறல் பேச்சு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வாஜ்பாயை சந்திக்க உள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் பேசியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Chief Minister Edappadi Palanisamy is going to Delhi to invite Prime Minister Vajpayee...minister baskaran
Author
Sivaganga, First Published Jan 14, 2021, 11:35 AM IST

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வாஜ்பாயை சந்திக்க உள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் பேசியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிமுகஅமைச்சரவையில் அதிகமாக உளறுவது யார் என போட்டி இருக்கிறதோ எனத் தோன்றுமளவுக்கு அமைச்சர்கள் தினந்தோறும் பொதுமேடைகளில் உளறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

Chief Minister Edappadi Palanisamy is going to Delhi to invite Prime Minister Vajpayee...minister baskaran

இந்நிலையில், சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில்;- தற்போதய சூழலில் பயிர் அழுகி முளைத்து விட்டது என பெண்கள் கதறுகின்றனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இழப்பீடு கேட்டு வருகின்றனர். விவசாயிகள் பற்றிதான் முதல்வர் சிந்தித்து வருகிறார். காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருமாறு பிரதமர் வாஜ்பாயை அழைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 18ம் தேதி டெல்லி செல்ல உள்ளார் என்று பேசினார்.

Chief Minister Edappadi Palanisamy is going to Delhi to invite Prime Minister Vajpayee...minister baskaran

பிரதமர் மோடியை அழைக்க செல்ல உள்ளதை, வாஜ்பாய் என மாற்றி அமைச்சர் கூறியதை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர் மற்றும் கூடியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சில மாதங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங்கை பாரதப் பிரதமர் எனக் குறிப்பிட்டுப் பேசிய நிலையில், தற்போதைய பிரதமர் என வாஜ்பாய் என மற்றொரு அமைச்சர் பேசியிருப்பது பொதுமக்கள், கட்சித் தொண்டர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios