Asianet News TamilAsianet News Tamil

ஓடி ஒளியாதீங்க மிஸ்டர் சிதம்பரம்… தில் இருந்தா வழக்கை ஃபேஸ் பண்ணுங்க ! வறுத்தெடுத்த ஜெயகுமார் !!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஓடி ஒளியாமல் அவர் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

chidambaram dont hide frm cbi
Author
Chennai, First Published Aug 21, 2019, 7:45 PM IST

ஐ.என்.எக்ஸ்.  மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முன் ஜாமீன் பெற்று வந்தார். இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐயும் அமலாக்கத்துறையும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன. 

அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்  ப.சிதம்பரத்தின் முன் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கைகளை சிபிஐயும் அமலாக்கத்துறையும் தொடங்கின. ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லியில் உள்ள அவருடைய  இல்லத்துக்கு அதிகாரிகள்  அவர் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர்.

chidambaram dont hide frm cbi

ஆனால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகியுள்ளார். இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் எப்படியாவது சிதம்பரத்தைக் கைது செய்துவிட வேண்டும் என சிபிஐ துடியாய் துடிக்கிறது. 

இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆனால் அதற்கு முன்பே சிதம்பரத்தைக் கைது செய்துவிட வேண்டும் என  சிபிஐ தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதனால் சிதம்பரம் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

chidambaram dont hide frm cbi

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. மடியில் கனம் இல்லை என்றால் ப.சிதம்பரம் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios