திட்டமிட்டே பூனையை இந்தியாவுக்கு அனுப்பியது அம்பலம்..!! மீண்டும் சீனாவுக்கே பூனையை திருப்பி அனுப்ப திட்டம்.
இந்நிலையில் பூனையை அனுப்பியது யார் , என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது . கப்பலில் வந்த பூனையை மீண்டும் சீனாவுக்கு கப்பலில் அனுப்ப துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .
சீனாவிலிருந்து வந்த கப்பலில் திட்டமிட்டே பூனையை கூண்டுக்குள் அடைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்நிலையில் பூனையை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் முயற்சியில் துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது . இதில் கடந்த மாதம் சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு வந்திருந்தது தெரியவந்தது .
சென்னை துறைமுகத்தில் கப்பலில் உள்ள சரக்குகளை இறக்கும்போது பூனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதனால் அதிர்ச்சி அடைந்த துறைமுக அதிகாரிகள் உடனே சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் . அப்போது அவர்கள் விரைந்து சென்று பூனைக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர் . இதில் அந்தப் பூனைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது . இருந்தாலும் பூனையைக் கடந்த சில தினங்களாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர் . இந்நிலையில் பூனையை கூண்டில் அடைத்து திட்டமிட்டு கண்டெய்னரில் வைத்து அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது .
இந்நிலையில் பூனையை அனுப்பியது யார் , என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது . கப்பலில் வந்த பூனையை மீண்டும் சீனாவுக்கு கப்பலில் அனுப்ப துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . வெளிநாடுகளிலிருந்து கண்டெய்னரில் விலங்குகள் உயிருடன் வந்தால் 3 நாட்கள்வரை யாரும் உரிமை கோர விட்டால் எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்பது விதி , இதன்படியே சீனாவுக்கு பூனை திருப்பி அனுப்பப்பட உள்ளது .