Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் மீது குபீர் வழக்கு ! திமுகவினரை மிரட்டும் அதிமுக !!

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து ஆதாரமில்லாமல் அவதூறாக பேசியதாக அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

case file aginst stalin
Author
Pollachi, First Published Apr 5, 2019, 9:26 AM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மைக் காலமாக முதலமைச்சர் , அமைச்சர்கள் மற்றும் அதிமுகவை கடுமையான பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொடநாடு பிரச்சனையில் ஆதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டை கூறி வந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கொட நாடு பிரச்சனை குறித்து பேசக்கூடாது என ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

case file aginst stalin

இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  கோவை தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுவ் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பார் நாகராஜுக்கும் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்பு இருப்பதாகவும், உள்ளாட்சி துறையில் அமைச்சர் வேலுமணி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும்  தெரிவித்தார்.

case file aginst stalin

இதையடுத்து ஆதாரமில்லாமல் தொடர்ந்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக  மு.க ஸ்டாலின்  அவதூறாக பேசி வருவதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவைச்சேர்ந்த ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், தொண்டாமுத்தூர் போலீசார் மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios