candidates gave objection to vishal for submitting petition in prior

ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிட இன்று கடைசி நாள் என்பதால் 45 சுயேச்சை வேட்பாளர், வேட்புமனுவை தாக்கல் செய்ய காத்திருக்கின்றனர்

 இதன் இடையே நடிகர் விஷாலும் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதாள்,தற்போது தேர்தல் அலுவலகத்தில் காத்திருக்கிறார்

இந்நிலையில், எங்களுக்கு முன் விஷால் வேட்பு மனு வாங்க கூடாது என்றும், சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்து வருகின்றனர்

விஐபி என்ற பாகுபாடின்றி விஷாலை வரிசையில் நிற்க வேட்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விஷாலை முன் கூட்டியே மனுவை தாக்கல் செய்ய விடக் கூடாது என்றும்,சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனை தொடர்ந்து விஷாலுக்கு 68 ஆவது டோக்கன் வழங்கப்பட்டட்டது.விஷாலுடன் அவருடைய ஆதரவாளர்கள் 300 கும் மேற்பட்டோர் சென்றனர். ஆனாலும் ஆர்.கே.நகர் மக்கள் தவிர யாரும் விஷாலுக்கு ஓட்டு போட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது 

இது தொடர்பாக ஜே.சி சுதாகர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.இதனை தொடர்ந்து முக்கிய நபர் என்ற பாகுபாடு இன்றி நடிகர் விஷாலும் சக வேட்பாளராக லைனில் நின்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.