Asianet News TamilAsianet News Tamil

சிஏஏ சட்டத்தை ஒரு சில கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தக்கூடாது.! மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் .

குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மலிவான அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று, ரயில்வே துறை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

CAA law should not be used by a few parties for political gain. Union Minister of State Fuse
Author
India, First Published Feb 19, 2020, 7:54 AM IST

 

T.Balamurukan

குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மலிவான அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று, ரயில்வே துறை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

CAA law should not be used by a few parties for political gain. Union Minister of State Fuse

தெலங்கானா சட்டப்பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற, சமீபத்தில் நடைபெற்ற அந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து பேசியவர்., ' கூட்டாட்சி அமைப்பில், தேசியச் சட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். சிஏஏ சட்டத்தை மலிவான அரசியலாக்க வேண்டாம். ஒரு சில மத்ததினரை மட்டும் திருப்திப்படுத்துவதன் அடிப்படையில் அரசியலாக்க வேண்டாம்.எந்த அடிப்படையும் இல்லாமல், தெலங்கானா சட்டப் பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற அந்த மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது.சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் முடிவை தெலங்கானா அரசு திரும்பப்பெற வேண்டும் என எச்சரிக்கை செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios