பாஜகவினருக்கு மாட்டு மூத்திரம் குடித்து குடித்து பைத்தியம் பிடித்திருக்கு... திமுக அமைச்சர் கடும் தாக்கு..!
ஈஷா விவகாரத்தில் தலையிட்டதால், அமைச்சர் பிடிஆரின் குடியுரிமை குறித்து அதிர்ச்சி தகவல்களை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
இந்த முட்டாள்களுக்கு மாட்டு மூத்திரம் குடித்து குடித்து பைத்தியம் பிடித்திருக்கு…..OCI வாக்களிக்க கூட முடியாது விஞ்ஞானி என பாஜகவினர் மீது கடுமையாக பாய்ந்துள்ளார் தமிழக நிதி அமைச்சர் பிடி தியாகராஜன் பழனிவேல்.
இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று ஈஷா ஜக்கி வாசுதேவ் சொல்லி வருவது குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் அண்மையில் ஒரு நிருபர் கேட்டபோது, ’’இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமானது. இதுபோன்ற கோரிக்கை விடுபவர்கள் இந்த சமூகத்தின் நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஜக்கி வாசுதேவ் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு விளம்பர பிரியர். இந்த பிரச்சினையை எழுப்பி பணம் சம்பாதிக்க அவர் மற்றொரு வழியை தேடுகிறார்.
ஜக்கிவாசுதேவ் ஒரு வணிக செயல்பாட்டாளர். கடவுள், மதம் ஆகியவற்றை அதற்கு உதவுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஈசா யோகா மையத்தில் என்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பது பற்றி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் சிஏஜி அறிக்கையில் சில முக்கிய குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதை நானும் கவனித்திருக்கிறேன். நானும் அதுகுறித்த விபரங்களை வெளியிடுவேன்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து ஜக்கிவாசுதேவின் ஈஷா மையம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் பிடிஆருக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திடீரென்று நேற்று 19.5.2021 மாலையில், ’’ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல. அது எனது நோக்கமும் அல்ல. மேலும், ஜக்கி வாசுதேவ் குறித்து புது தகவல்களோ, நிகழ்வுகளோ எழும் வகையில் இதைப் பற்றி நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை. இனி எந்தவொரு நிகழ்விலும், இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை’’ என்று அந்தர் பல்டி அடித்தார்.
ஈஷா விவகாரத்தில் தலையிட்டதால், அமைச்சர் பிடிஆரின் குடியுரிமை குறித்து அதிர்ச்சி தகவல்களை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். ‘’தகவல்கள் திரட்டிய வகையில் PTR இந்திய குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு , வெளிநாட்டு குடியிரிமை பெற்றுவிட்டார். இப்போது OCI (Overseas citizen of India) card holder.’’என்றும், ’’ஒரு OCI card holder சட்டப்படி தேர்தலில் போட்டியிடபக்கூடாது.இவர் OCI card holderஆக இருக்கும் பட்சத்தில் இவரை தகுதி நீக்கம் செய்து சட்டப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிறகு இவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக, இந்திய மண்ணில் வாழ தகுதி அற்றவர் என்று சான்றழித்து நிரந்தரமாக நாடு கடத்தலாம்.’’என்றும் பாஜகவினர் சொல்லி வருகின்றனர்.
இதனால் ஆவேசம் அடைந்த அமைச்சர் பிடிஆர், ’’இந்த முட்டாள்களுக்கு மாட்டு மூத்திரம் குடித்து குடித்து பைத்தியம் பிடித்திருக்கு…..OCI வாக்களிக்க கூட முடியாது விஞ்ஞானி. வரம்பற்ற முட்டாள்தனம் சிரித்துக்கொண்டே தரையில் உருள வேண்டியதுதான்.’’என்று தெரிவித்துள்ளார்.