பால்கர் சாது படுகொலை... 5 கம்யூனிஸ்டுகளை தீவிரமாக தேடும் போலீஸ்..!
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் ஹிந்து சாதுக்களை கொடூரமான முறையில் கொலை செய்த கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியை சேர்ந்த 5 முக்கியவாளிகளை போலிசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் ஹிந்து சாதுக்களை கொடூரமான முறையில் கொலை செய்த கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியை சேர்ந்த 5 முக்கியவாளிகளை போலிசார் தேடி வருகின்றனர்.
ஜெய்ராம், மகேஷ் சீதாராம், கணேஷ் தேவாஜி ராவ், ராம்தாஸ் ரூப்ஜி மற்றும் சுனில் சோமாஜி ராவத்தே ஆகிய குற்றவாளிகள் கடந்த வியாழக்கிழமை இரவு, மும்பையில் நடந்த குரு மகாந்த் ராம் கிரி மகாராஜின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப் போய்க் கொண்டிருந்த, சுஷில் கிரி மகாராஜ், மகாராஜ் கல்பவ்ரிக்ஷா கிரி மற்றும் அவரது ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் ஆகியோரை அன்று இரவு கொலை செய்துள்ளனர்.
இந்தக் கும்பல் சிபிஎம் தலைவர்களால் தூண்டப்பட்டதாகவும், இப்போது முழு சம்பவமும் திட்டமிடப்பட்ட சதி என்கின்றனர் அந்த ஊர் மக்கள். கொலை சம்பவம் நடந்த பகுதி கிறிஸ்தவ மிஷனரிகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கே உள்ள ஹிந்துக்களை, கிறித்துவ மதத்திற்கு மதம் மாற்ற பல்வேறு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு இந்த கிருஸ்துவ மிஷனரிகள் விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த பகுதியில் மத மாற்றங்கள் பல ஆண்டுகளாக நிகழ்ந்துள்ளன. கம்யூனிஸ்ட் தலைவர்களின் உத்தரவின் பேரில் மூவரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளனர், திடீரென ஒரு கும்பல் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காவல்துறையினர் ஊமையாக பார்வையாளர்களாக இருந்ததால், அந்த மூவரையும் தடிகளால் தாக்கியுள்ளனர். பொது மக்களும் அங்கு வரவே, இந்த மூவரும் குழந்தைகளை திருட வந்ததாக பொய் சொல்லியுள்ளனர்.
பிரச்சனை பெரிதாகவே காவல்துறை அந்த கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. 110 பேரை கைது செய்த காவல்துறை, பல நபர்களை தப்பிக்க விட்டதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட 110 பேரும், மற்றும் தலைமறைவாக உள்ளவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் என்று கூறப்படுகிறது. கிறிஸ்தவ மிஷனரிகளுடன் தொடர்பு கொண்ட கஷ்டகரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரான ஷிராஸ் பல்சரா கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீனுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளூர் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. வினோத் நிகோலே என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.