Asianet News TamilAsianet News Tamil

இந்த தேர்தல் தேசியவாதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையே போட்டி... திமுகவை சாடும் எல்.முருகன்..!

வெற்றிவேல் யாத்திரைக்குக் கிடைத்த ஆதரவு, ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. எனவே, தேர்தலுக்காக வேஷம்போட்டுள்ளவர்களின் போலி முகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 

assembly election... Competition between nationalists and anti-nationals.. l.murugan
Author
Coimbatore, First Published Feb 15, 2021, 5:14 PM IST

திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டது என எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

1998 பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் நடைபெற்ற தொடர்குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நேற்றுநடைபெற்றது. இதில், பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

assembly election... Competition between nationalists and anti-nationals.. l.murugan

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசுகையில்;- இந்து, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட்கள் செயல்படுகின்றன. பிரதமரையும், இந்துகடவுள்களையும் கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார்அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது திமுக-காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கமும் அவர்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்தது திமுக. எனவே, திமுக, திகவின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும்.

assembly election... Competition between nationalists and anti-nationals.. l.murugan

வெற்றிவேல் யாத்திரைக்குக் கிடைத்த ஆதரவு, ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. எனவே, தேர்தலுக்காக வேஷம்போட்டுள்ளவர்களின் போலி முகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல். இதில் தேச பக்தர்கள் வெல்ல வேண்டும் என எல்.முருகன் பேசியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios